தமிழ்நாடு

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

விக்ரம் வீடியோ… ஈரோடு பண்ணை… அடுத்தடுத்து சிக்கிய அரிய விலங்குகள்! 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் அரிய வகை ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) குரங்குடன் நடிகர் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் இல்லத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் கேசவநாதனிடம் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை என நடிகர் விக்ரம் மற்றும் ரங்கநாதன் தரப்பில் வனத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் பெருந்துறை பண்ணையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். பெருந்துறை பண்ணையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரிய வகை குரங்குகளை வைத்திருந்ததற்கான உரிய ஆவணங்கள் தொழிலதிபர் கேசவநாதனிடம் இல்லாதது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த 3 லார் கிப்பான் குரங்குகளில் ஒன்று உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காதது மற்றும் ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகக் தொழிலதிபர் கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட 7 ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 டஃப்டட் கேப்புசின் குரங்குகள் என மொத்தம் 11 அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் தற்போது பண்ணையிலேயே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு இவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு மீட்பு மையத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள ஒரு பெரும் நெட்வொர்க் சிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர்.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

ரூ.5.54 கோடி முதல்வர் அலுவலகம்… டெண்டருக்கு முன்பே வேலை தொடங்கியதா?

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும் முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

தமிழ்நாடு

“முதல்வரைப் பாராட்டினால் வரி!” – இந்தியாவின் ரூ.214 லட்சம் கோடி கடனை அடைக்க அமைச்சரின் ‘அடடே’ ஐடியா! 

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு முதலில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இணையதளத்தில் வெளியானதாகவும், டெண்டர் ஆவணங்களில் பணிகளின் மொத்த மதிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, டெண்டர் நடைமுறை முழுமையாக முடிவடைவதற்கு முன்பே புதிய அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், “டெண்டர் முடியும்முன்பே பணிகள் எப்படி தொடங்கின? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தனிப்பட்ட வசதிக்காக அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மிகக் குறுகிய இடங்களில் பணியாற்றுவதால், அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய அலுவலகம் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒருபுறம் அரசின் விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் டெண்டர் அறிவிப்பு வெளியான விதம், இணையதளப் பதிவில் ஏற்பட்ட தாமதம், பணிகள் முன்கூட்டியே தொடங்கியதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளன. ரூ.5.54 கோடி செலவில் உருவாகும் முதல்வர் அலுவலகமே வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தின் மையமாக மாறியிருப்பது அரசுக்கு புதிய தலைவலியாகியுள்ளது.

தமிழ்நாடு

கோவை ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ.கோலி’! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CAG அறிக்கை

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ‘ஈ.கோலி’ (E. coli) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தணிக்கைத் துறை (CAG) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தபோது, கோவை உள்ளிட்ட 8 நிலையங்களின் குடிநீர் மாதிரிகளில் ஈ.கோலி பாக்டீரியா கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கழிவுநீர் அல்லது மனித, விலங்குகளின் கழிவுகள் குடிநீரில் கலந்திருப்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக ஈ.கோலி கருதப்படுகிறது. மேலும், குடிநீரில் குளோரின் அளவு மற்றும் பாக்டீரியாவியல், ரசாயன பரிசோதனைகள் உரிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் CAG சுட்டிக்காட்டியுள்ளது.  கோவை மட்டும் அல்ல… நாடு முழுவதும் ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் CAG அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 512 ரயில் நிலையங்களில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கை, நடைமேடை நிழற்கூரை உள்ளிட்ட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ரயில் நிலையங்களில் சுமார் 20,000 இடங்களில் ‘டேங்க் டு டேப்’ நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவவும், குடிநீர் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். “தாகம் தீர்க்க ரயில் நிலையத்தில் குடிக்கும் தண்ணீரே… உடலுக்கு ஆபத்தாக மாறிவிடுமா?” என்ற கேள்வியை கோவை சம்பவம் எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு

“போலீஸ் அடித்ததால் இறந்தாரா?” – பரமசிவம் மரணத்தில் மதுரை போலீஸ் பகீர் விளக்கம்!

மதுரையில் ஜோதிடரும் கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார்” என குடும்பத்தினர் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் மதுரை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸ் தரப்பின்படி, ஜூலை 17-ம் தேதி பரமசிவத்துக்கும் அருகில் வசித்த தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜூலை 23-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஜூலை 24-ம் தேதி வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறிய பரமசிவம், ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம், “தவறி விழுந்தேன்; போலீஸ் நடவடிக்கை தேவையில்லை” என அவரே தெரிவித்ததாகவும், அது காவல் நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளது. இதற்கிடையே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியும் அதை ஏற்காமல் பரமசிவம் ஆகஸ்ட் 6-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 16-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், “காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால்தான் கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்” என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளதால் சர்ச்சை நீடிக்கிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

கோவளத்தில் கூடும் தென் மாநிலங்கள்… விஜய்யை சந்திக்கிறாரா அமித்ஷா?

சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென்மாநில முதல்வர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சனைகள் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான தென்மாநிலங்களின் கவலைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இக்கூட்டத்தின் ஊடே மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் இடையே தனியாகவோ அல்லது சந்திப்பின் போதோ ஆலோசனைகள் நடைபெறக்கூடும் என்ற அரசியல் பேச்சுக்கள் மேலெழுந்துள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடு மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இம்மாநாடு தேசிய அளவிலும், மாநில அரசியல் தளத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top